
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்ற வருகிறது. அங்கு பாஜகவை சேர்ந்த சாய் சரணகுமார் என்பவர் அமைச்சராக இருந்துள்ளார். அதாவது அவர் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்தார். இந்நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் ரங்கசாமியிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதையடுத்து காலியாக உள்ள அந்த அமைச்சர் பதவியை காமராஜர் நகர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமாருக்கு வழங்க அக்கட்சியின் தலைமை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.