தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து தற்போது முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சின்னத்திரை சீரியலில் நடித்தார். அதன் பிறகு மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி சங்கருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. இவர் தற்போது ஜெயம் ரவியுடன் சேர்ந்து அகிலன், சிம்புவுடன் சேர்ந்து பத்து தல, ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து ருத்ரன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதில் அகிலன் திரைப்படம் மார்ச் 10-ம் தேதியும், பத்து தல படம் மார்ச் 30-ம் தேதியும், ருத்ரன் படம் ஏப்ரல் 14-ஆம் தேதியும் வெளியாகிறது. வருகிற 35 நாட்களுக்குள் பிரியா பவானி சங்கர் நடித்த 3 படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. இதனால் முன்னணி ஹீரோயின்களுக்கு பிரியா பவானி சங்கர் டஃப் கொடுத்துள்ளார் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து பிரியா பவானி சங்கர் இந்தியன் 2, டிமான்டி காலனி 2, பொம்மை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். மேலும் தற்போது பிரியா பவானி சங்கர் தெலுங்கிலும் நடித்து வருவதால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.