
மியான்மர் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தினால் அதன் சுற்றியிருந்த பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது மியான்மர் பகுதியில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை காலை 11:50 மணிக்கு 7.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து இந்திய தேசிய நில அதிர்வு ஆய்வகம் தகவல் வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி நிலநடுக்கம் மியான்மாவின் மத்திய பகுதியில் உள்ள மோனிவா நகரத்துக்கு கிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும் 10 கிலோமீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தாய்லாந்தின் பாங்காகிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நிலநடுக்கத்தின் போது அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்தது. அதோடு அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் இருந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கட்டிடங்களில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.இந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோவாக இணையத்தில் வைரலான நிலையில் நெஞ்சை பதற வைக்கும் பல காட்சிகள் அதில் காணப்படுகின்றன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை தற்போது 130 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மியான்மர் மற்றும் பாங்காக்கில் இந்த நிலநடுக்கம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Bangkok earthquake right now #bangkok #earthquake #bkknews #bkk #แผ่นดินไหว pic.twitter.com/iKGUnc7Exd
— Sebastian Wolff (@sebastianwolffX) March 28, 2025