
ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பும் மாவட்டத்தில், பஹராகோரா பகுதியில் பா.ஜ.க.வின் பொதுக்கூட்டத்தில் மத்திய வேளாண் துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கூட்டத்தின் பிறகு, அவர் ராஞ்சிக்கு திரும்புவதற்காக ஹெலிபேடுக்கு செல்லத் தயாரானார்.
அப்போது, சாலையில் நீர் தேங்கி, அது அருகில் உள்ள பள்ளத்தில் அவரது கார் சிக்கிக்கொண்டது. காரின் ஓட்டுநர் காரை வெளியே எடுக்க முடியாமல் போராடினார். இந்தச் சம்பவம் மந்திரியின் பயணத்தை தாமதமாக்கியது, இதனால் அவர் காரிலிருந்து வெளியே வந்தார்.
மந்திரி சவுகான், பின்னர், உள்ளூர் மக்களிடம் சிறிது நேரம் பேசினர். அவரின் பாதுகாப்புக்காக, பிறகு ஹெலிகாப்டரில் ஹெலிபேட்டுக்கு சென்று ராஞ்சி நகருக்கு திரும்பினார். மேலும் இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.