பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு ராமச்சந்திரன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதேபோல் தெற்கு தெருவில் வசிக்கும் பிரபாகரன் என்பவரது வீட்டிலும் மர்ம நபர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணம், 4 பவுன் தங்க நகை ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார்களின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.