தமிழகத்தில் இன்று குரூப் 2 தேர்வுகள் நடைபெற்றது. அந்த வகையில் கோயம்புத்தூரில் மொத்தம் 113 மையங்களில் தேர்வு நடைபெற்றது. அங்கு மட்டும் சுமார் 33,490 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுத வருவோர் காலை 9 மணிக்கு முன்னதாகவே தேர்வு எழுதும் மையத்திற்குள் வந்துவிட வேண்டும். அதற்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மணிக்கூண்டு பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவி ஒருவர் தாமதமாக வந்துள்ளார். அந்த மாணவி அங்கிருந்த காவல்துறையினரிடம் தாமதமாக வந்ததற்கு மன்னித்து விடுங்கள். எப்படியாவது என்னை தேர்வு எழுத அனுமதியுங்கள் என்று கெஞ்சினார். அப்போது அங்கிருந்த எஸ்.ஐ ஒருவர் கையெடுத்து கும்பிட்டு ப்ளீஸ்மா. உங்களை நான் அனுமதித்தால் என்னுடைய வேலையே போய்விடும். தயவுசெய்து நிலைமையை புரிந்துகோங்க என்று கூறினார். மேலும் அந்த காவலரின் நிலைமையை உணர்ந்த மாணவி அங்கிருந்து சென்றார்.