
பூட்டான் திம்புவில் 15 வது தெற்காசிய உடற்கட்டமைப்பு மற்றும் உடற்கல்வி விளையாட்டு சாம்பியன்ஷிப் 2025 போட்டி கடந்த ஜூன் 11 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது.
அந்தப் போட்டியில் இந்தியாவிலுள்ள அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஷில்லாங் யாஜிக் இந்தியாவுக்காக ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த சாதனையின் மூலம் மேஜிக் சர்வதேச அளவில் தங்கப்பதக்கம் வென்ற அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அந்த வெற்றி அவரது மாநிலத்திற்கும், நமது நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்தது. இதுகுறித்து அருணாச்சலப் பிரதேசத்தின் உடற்கட்டமைப்பு சங்கத்தின் தலைவர் நபம் துணா கூறியதாவது, இது யாஜிக்கின் தனிப்பட்ட வெற்றி மட்டுமல்ல உலகளாவிய தரத்தில் இந்தியாவை பிரதிநிதிப்படுத்துவதற்கு முக்கியமான வெற்றியாக குறிப்பிடப்படுகிறது என பாராட்டினார்.
மேலும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பல தெற்காசிய நாடுகள் பங்கேற்று உள்ளன. இந்தியாவைச் சேர்ந்த யாஜிக்கின் வெற்றி புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது என பலரும் பாராட்டு வருகின்றனர்.