மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரத்லம் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்ட நிலையில், ரயில் பெட்டிகளில் இருந்த டீசல் வெளியே கசிய தொடங்கியது. அந்த பகுதியில் வசிக்கும் சிலர் வாளிகள் மற்றும் டப்பாக்களில் டீசலை நிரப்பிக்கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தின் பின்னர், ரயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, டீசல் கசிவை கட்டுப்படுத்த முயன்றனர். ரத்லம் கோட்ட ரயில்வே மேலாளர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்ததாவது, “ஒரு பெட்டியிலிருந்து பெட்ரோலியப் பொருட்கள் கசிய தொடங்கியுள்ளது. ஆனால், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்” என கூறினார்.