
அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அதிமுக கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பவன் கல்யாண் அதிமுக ஆட்சி புரட்சி தலைவர் எம் ஜி ஆரால் உருவாக்கப்பட்டது. தமிழக அரசியலில் சக்தி வாய்ந்த ஆட்சியாக வேகமாக மாறியது. நான் மிகவும் மதிக்கும் தலைவர்களில் ஒருவர் எம்ஜிஆர் எனக்கு ரோல் மாடல் எம்ஜிஆர் தான் என அவர் கூறியுள்ளார். ஏழைகளின் மேம்பாட்டிற்காக மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்தவர் எம்ஜிஆர். அவர் கொண்டிருந்த நம்பிக்கையால் தான் தமிழகத்தை நாட்டின் வளமான மாநிலமாக மாற்றியது.
மக்கள் நலன் மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி ஆகிய இரண்டிலும் அவரது பணி ஒரு நிலையாக உள்ளது மேலும் இது எனக்கு தனிப்பட்ட முறையில் ஊக்கம் அளிக்கிறது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் ஆட்சி எம்ஜிஆரின் இலக்குகளை கொண்டு சென்றது மட்டுமின்றி மக்களால் அம்மா என்ற தனித்துவமான மரியாதையும் அவருக்கு பெற்று தந்தது. அண்டை மாநிலங்களுடன் நட்பு உறவை வளர்ப்பது மற்றும் தெலுங்கு மொழியின் மீதான மரியாதை பாராட்டத்தக்கது. இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக அரசியலை திறமையாக வழி நடத்திய ஓ பன்னீர் செல்வத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியை திறமையாக வழிநடத்தியது ஓ பன்னீர்செல்வம் தான் என்று பவன் கல்யாண் கூறியது பேசும் பொருளாக மாறியுள்ளது.