திரிபுராவில் வசித்து வருபவர் ஷியாமல் தாசு (40). இவருக்கு ஸ்வப்னா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு ஷியாமல் தாசுக்கும் அவரது மனைவி ஸ்வப்னாவுக்கும் இடையே வழக்கம் போல குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இறுதியில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரத்தில் கூர்மையான ஆயுதத்தால் ஸ்வப்னாவை ஷியாமல் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஸ்வப்னா பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனால் செய்வதறியாது திகைத்த ஷியாமல் இரவு முழுவதும் மனைவியின் உடலோடு தங்கி இருந்துள்ளார். அதன் பின் மறுநாள் மதியம் மேற்கு திரிபுரா மாவட்டத்தில்  காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி காவல் துறையினரிடம் ஷியாமல் தாசு  சரணடைந்தார். இதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஸ்வப்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.