ஜம்மு காஷ்மீரில் கடந்த 2019 ஆம் ஆண்டு புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

அந்தத் தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் f16 போர் விமானத்தை அபிநந்தன் வர்தமான் என்ற ராணுவ வீரர் விரட்டி சென்றார். அப்போது அவர் சென்ற மிக் 21 விமானம் சுட்ட வீழ்த்தப்பட்டது.

ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய அபிநந்தன் பேராஷூட் மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் தரை இறங்கினார். அப்போது அபிநந்தனை பாகிஸ்தான் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா என்பவர் சிறைப்பிடித்தார்.

பின்னர் மத்திய அரசின் கடும் எச்சரிக்கையை  அடுத்து  58 மணி நேரத்தில் அபிநந்தன் அதோரி- வாகா எல்லை வழியாக இந்தியாவிற்க்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியான கைபர் பக்துன்கவா என்ற மாவட்டத்தில் தெஹ்ரிக் இ தலிப்பான்கள் என்ற பயங்கரவாத அமைப்பினால் மேஜர் மோய்ஷ் அப்பாஸ் ஷா உள்பட 2 பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அந்தத் தாக்குதலில் 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.