
இந்தியா- பாகிஸ்தான் மீது சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்ட போது கொல்கத்தாவை சேர்ந்த சட்டக் கல்லூரி பட்டப் படிப்பு முடித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஷர்மிஸ்தா பனோலி வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் வீடியோக்களை வெளியிட்டார். அதனால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது அந்தப் புகாரை தொடர்ந்து பனோலி குடும்பத்துடன் தலைமுறைவானார்.
இதனை அடுத்து நீதிமன்றத்தின் கைது வாரண்ட் உடன் காவல்துறையினர் பனோலியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மே 31ஆம் தேதி குர்கிராமில் பனோலி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பனோலிக்கு ஆதரவாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
During Operation Sindoor, Sharmistha, a law student, spoke out, her words regrettable and hurtful to some. She owned her mistake, deleted the video and apologized. The WB Police swiftly acted, taking action against Sharmistha.
But what about the deep, searing pain inflicted… pic.twitter.com/YBotf34YYe
— Pawan Kalyan (@PawanKalyan) May 31, 2025
அந்தப் பதிவில், ஆபரேஷன் சிந்தூரின் போது, சட்டக் கல்லூரி மாணவி ஷர்மிஸ்தா தனது வார்த்தைகளை வருத்தத்துடன் வெளிப்படுத்தினார், மேலும் சிலருக்கு அது புண்படுத்தியது. தனது தவறை உணர்ந்த அவர், வீடியோவை நீக்கி மன்னிப்பு கேட்டார். மேற்கு வங்க காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தது.
ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களும் சனாதன தர்மத்தை கேலி செய்யும்போது, மில்லியன் கணக்கான மக்களுக்கு ஏற்படும் ஆழமான, கடுமையான வலியைப் பற்றி என்ன? நமது நம்பிக்கை ‘காந்த தர்மம்’ என்று அழைக்கப்படும்போது சீற்றம் எங்கே? அவர்களின் மன்னிப்பு எங்கே?.
தெய்வ நிந்தனை எப்போதும் கண்டிக்கப்பட வேண்டும்! மதச்சார்பின்மை சிலருக்கு கேடயமாகவும், மற்றவர்களுக்கு வாளாகவும் இருக்காது. அது இருவழிப் பாதையாக இருக்க வேண்டும். மேற்கு வங்க காவல்துறை, நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அனைவருக்கும் நியாயமாக நடந்து கொள்ளுங்கள் என பதிவிட்டிருந்தார்.