
சென்னையில் ஒரு தலை காதலால், காதலனை பழிவாங்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஐடி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரில் ரினே ஜோஸ்லிடா என்ற பெண், திவிஜ் பிரபாகர் என்ற சக ஊழியரை ஒரு தலைப்பட்சமாக காதலித்து உள்ளார்.
ஆனால் திவிஜ், ரினேவின் காதலை ஏற்காமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த ரினே, பிரபாகரை பழிவாங்க போலியான ஈமெயிலை உருவாக்கி 12 மாநிலங்களில் உள்ள 21 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
தனது காதலன் பிரபாகரை சிக்க வைக்க அவரது பெயரில் ஈமெயிலை உருவாக்கிய அதில் அனுப்பியுள்ளார். வி பி என் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டார்க் வெப் மூலமாக இமெயிலை அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மிரட்டல் விடுத்த பெண்ணை தேடி வந்தனர். அப்போது அவர் போலி ஈமெயில் பயன்படுத்திய கணினியிலேயே தனது ஒரிஜினல் இமெயில் கணக்கையும் பயன்படுத்தி உள்ளார். இதனால் காவல்துறையினர் வலையில் அவர் சிக்கினார்.