
இன்றைய காலகட்டத்தில் கார் என்பது அனைவருக்கும் அவசியமாக உள்ளது. இந்நிலையில் காரை பயன்படுத்தும் போது மிகவும் பாதுகாப்பான முறையில் செயல்பட வேண்டும். இதனை எடுத்துக்காட்டும் விதமாக சமீபத்தில் இணையதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் காரின் ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் தண்ணீர் பாட்டில் ஒன்று உள்ளது. அந்தக் கார் வெயிலில் நிறுத்தப்பட்டுள்ளதால் தண்ணீர் பாட்டில் மீது சூரிய ஒளிக் கதிர்கள் நேரடியாக விழுகின்றன.
மகிழுந்தில் (car) தண்ணீர் குவளை வைப்பவரா நீங்கள் இது உங்களுக்கான காணொளி… pic.twitter.com/2jS990ZK94
— இளம்பரிந்தன் (@Ilamparintan) June 11, 2025
அதனால் பாட்டிலில் உள்ள தண்ணீர் குவிலென்ஸ் போல செயல்பட்டு சூரிய கதிர்கள் கியர் பாக்ஸ் உள்ளிட்ட பகுதிகள் மீது பட்டு தீ பிடிக்க தொடங்குகிறது. அதனால் காரிலிருந்து லேசாக தீப்பிடித்து புகை வருவது போல வீடியோவில் பதிவாகி இருந்தது.
இச்சம்பவம் ஒரு கார் தீ பிடிப்பதற்கு ஒரு சிறு விஷயமே போதும் என காட்டப்பட்டுள்ளது. எனவே காரில் பயணிக்கும் போது தண்ணீர் பாட்டில்களை கவனமாக வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை அந்த வீடியோ எடுத்துக்காட்டி உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.