உலகம் முழுவதும் பலர் செய்யத் தயங்கும் ஒரு வேலை, அதாவது துவைத்த துணிகளை மடித்து வைக்கும் வேலையைத் தவிர்க்க, சாமர்த்தியமான ஒருவர் அதை ஒரு கிறிஸ்மஸ் மரம் போல மாற்றி அமைத்த வினோதமான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

https://www.instagram.com/reel/DSJVsAxDPpf/?utm_source=ig_web_copy_link

கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வரும் வேளையில், வீடுகளை அலங்கரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், துணிகளை மடிக்காமல் குவிந்திருந்த குவியலை அந்த நபர் ஒரு கிறிஸ்மஸ் மரம் போல வடிவமைத்து, அதன் மேல் அலங்கார விளக்குகளைச் சுற்றிவிட்டுள்ளார். சிறிது முயற்சியுடன் அந்தக் குவிந்த துணிகள் ஒரு தற்காலிகமான கிறிஸ்மஸ் மரம் போல் தோற்றமளிக்கிறது.

விளக்குகள் எரியத் தொடங்கியதும் அறை முழுவதும் பண்டிகைக் காலப் பொலிவைப் பெறுகிறது. ‘துணிக் குவியல் பெரிதாகி, அதைக் கிறிஸ்மஸ் நெருங்கி வருவதால் மடிக்க மனமில்லாதபோது’ என்று அந்த நபர் காணொளியில் வேடிக்கையாகப் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த இந்திய உள்ளடக்கப் படைப்பாளரின் ‘@RoadsAndReels’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த சுவாரஸ்யமான காணொளி, பண்டிகைக் கால மகிழ்ச்சி என்பது விலையுயர்ந்த அலங்காரங்களில் இல்லை. மாறாக, நகைச்சுவை மற்றும் படைப்பாற்றலில் தான் உள்ளது என்பதை நினைவுபடுத்துகிறது.