
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170-வது படமான “வேட்டையன்” எதிர்பார்ப்பை எட்டிப்பிடித்துள்ளது. இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், ஒரு பான் இந்தியா திரைப்படமாக அக்டோபர் 10-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட உள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நடிகை மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்ட பல்வேறு பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் வெளியீட்டை கொண்டாடும் வகையில் புதுச்சேரியில் உள்ள “வாஸ்கோ” எனும் தனியார் நிறுவனம், வேட்டையன் ரிலீஸ் நாளில் தங்களது ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை விடுமுறை மட்டுமின்றி, நிறுவனம் தங்களது அனைத்து ஊழியர்களுக்கும் திரைப்பட டிக்கெட்டுகளையும் இலவசமாக வழங்கியுள்ளது.