தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு ஆய்வு காப்பீடு மற்றும் விபத்து காப்பீட்டை கட்டணமின்றி வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, அரசு ஊழியர்களுக்கான ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு ஆகியவற்றை 7 முன்னோடி வங்கிகள் மூலமாகக் கட்டணமின்றி வழங்க, இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக நமது அரசு ஏற்பாடு செய்துள்ளது! இதற்கான MoU இன்று மேற்கொள்ளப்பட்டது.

சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவித்தபடி, தனிநபர் வங்கிக் கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றையும் வட்டிச் சலுகைகளுடன் வழங்கப் பேச்சுவார்த்தை நடத்தி ஏற்பாடு செய்துள்ளோம்!. மேலும், இன்றைய நிகழ்வில், 211.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவை புறநகர்ப் பகுதியான பிளிச்சியில் கட்டப்படவுள்ள புதிய சிறைச்சாலை – சிறைக்காவலர் குடியிருப்புகள். சென்னை மற்றும் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 457.14 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள காவலர் குடியிருப்புகள் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினேன் என்று கூறியுள்ளார்.