
அன்றாட வாழ்வில், சிறிய தொகைகளுக்கு கூட நாம் பல நேரங்களில் கவலைப்படுகிறோம். தேவைப்படும்போது, கடனுக்காக நம் உறவினர்களின் வீட்டு வாசலுக்குச் செல்ல வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கடினமான காலங்களில் உங்களுக்கு அடையாளத்தை வழங்க உதவும் ஆதார் அட்டை, இப்போது ரூ.10 ஆயிரம் வரை கடனைப் பெறவும் உதவுகிறது.
அதுவும் ஒரு சில நாட்களில், நெருக்கடியான நிதி தேவை ஏற்பட்டால், தற்போது ஆதார் அட்டை மூலம் ரூ.10,000 வரை கடனைப் பெறுவது மிகவும் எளிதாகியுள்ளது. வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் ஆதார் அடிப்படையிலான கடன்களை வழங்க ஆரம்பித்துள்ளன. இந்த கடன் பாதுகாப்பற்றது (Unsecured Loan) என்பதால், எந்தவிதமான சொத்து உத்தரவாதம் தேவைப்படுவதில்லை.
இது சம்பளதாரர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு ஏற்ற விரைவான நிதி ஆதாரமாக செயல்படுகிறது. e-KYC வாயிலாக, சில நாட்களுக்குள் பணம் கணக்கில் வரவு செய்யப்படுகிறது. இதற்கு தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் பின்வருமாறு, அதற்கான குறைந்தபட்ச வயது 21 – அதிகபட்சம் 65 வரை. மேலும் மாத வருமானம் குறைந்தது ரூ.25,000 முதல் இருக்கலாம்.
இதனையடுத்து கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல்நிரந்தர முகவரி மற்றும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். முக்கியமாக ஆதார் அட்டைக்கு பான், வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த கடனை பெற தேவையான ஆவணங்கள், ஆதார் அட்டை, பான் கார்டு / வாக்காளர் ஐடி / ஓட்டுநர் உரிமம், வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியன கட்டாயம் தேவை.
பின்னர் இதற்கு விண்ணப்பிக்கும் எளிய ஆன்லைன் நடைமுறைகள், கடன் வழங்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்குச் செல்லவும் அல்லது செயலியை பதிவிறக்கவும். தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும். பின்னர் ஆதார் எண் மற்றும் பிற விவரங்களை உள்ளிடவும். அடுத்து கொடுக்கப்படும் OTP மூலம் e-KYC ஐ நிறைவு செய்யவும். அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின், 2–3 நாட்களில் பணம் வங்கிக் கணக்கில் வரவு செய்யப்படும்.
ஏற்கனவே ஆதார் உங்கள் பான் மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், கூடுதல் ஆவணங்கள் தேவைப்படாது. ஆனால், உங்கள் மீது ஏற்கனவே ஏதேனும் கடன் மோசடி புகாருகள் இருந்தால், இக்கடனுக்கு தகுதியில்லை என்பது குறிபிடித்தக்கது.
முக்கியமாக இந்த வாய்ப்பை பயன்படுத்தி நெருக்கடியான நேரங்களில் யாரையும் தொடர்பு கொள்ளாமலும், வட்டி இல்லாத உரிமையுடனும் பணத்தை பெற முடிகிறது. ஆனால் தவறான தகவல்களுடன்கூடிய மோசடி நிறுவனங்களைத் தவிர்ப்பது அவசியம்.