இன்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தெளிவா நான் சொல்கின்றேன். 18ஆம் தேதி எடுத்த முடிவுகளில் எந்த மாற்றமும் இல்லை. மத்திய அமைச்சர்களை எம்.பி போய் பார்ப்பது தப்பா ? எம்எல்ஏ போய் பார்ப்பது தப்பா ? இதற்கு தான் போய் பேசினார்கள் என்று எப்படி தெரியும். தமிழக மக்களின் பிரச்சினைகள் குறித்தே அதிமுக எம்பிகள் மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார், கட்சி குறித்து அல்ல.

அதிமுக ஆபீஸ்ல நாளைக்கு மூணே முக்காலுக்கு மீட்டிங் இருக்கு. வாங்க…  அங்க உள்ள சூழ்நிலையை பார்த்தீங்கன்னா…  கட்சி ஆபீஸில் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதைத்தான் நான் கருத்து சொல்ல முடியும. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து நாளைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.