நாடு முழுவதும் நீட் தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த தேர்வினை 20 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில் இந்த தேர்வின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 13,000 பேர் உட்பட மொத்தமாக ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதியிருந்தனர். இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று ஏற்கனவே தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை முதலே மாணவர்கள் தேர்வின் முடிவுகளை எதிர்பார்த்து இருந்தனர்.

இந்நிலையில் தேசிய தேர்வு முகமை தற்போது இணையதளத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அவர்களுடைய பதிவு எண்ணை உள்ளீடு செய்து மதிப்பெண்களை அறிந்து வருகிறார்கள். இந்நிலையில் நீட் தேர்வில் முதல் 100 இடங்களில் 6 தமிழ்நாட்டு மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் திருநெல்வேலி சேர்ந்த சூரியன் நாராயணன் என்பவர் மாநில அளவில் முதலிடத்தையும் தேசிய அளவில் 27 வது இடத்தையும் பிடித்துள்ளார்.