மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இளைஞர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் அக்சய் ஜெயின். இவர் தன் சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு, தனது கேட்பெரி சாக்லேட்டில் புழு போன்ற பூச்சி இருந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இது அவருக்கு மிகவும் மோசமான அனுபவமாக இருந்ததாகவும், பல ஆண்டுகளாக கேட்பெரி சாக்லேட்டுகளை சாப்பிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை மறுக்காத கேட்பெரி நிறுவனம், தங்களின் உத்தியோகப்பூர்வ சமூக வலைதள கணக்கில் பதிலளித்தது. “உங்களின் மோசமான அனுபவத்திற்காக வருந்துகிறோம். உங்கள் புகாரை எழுத்துப்பூர்வமாக அனுப்பினால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்கிறோம்” என்று தெரிவித்தது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. பலரும் இது தொடர்பாக கேட்பெரி நிறுவனத்தின் தரநிலையை கேள்விக்குள்ளாக்கி வருகின்றனர்.