கோவை வஉசி மைதானத்தில் “எங்கள் முதல்வர் -எங்கள் பெருமை” வரலாற்று சிறப்புமிக்க புகைப்பட கண்காட்சி சென்ற ஏப். 7 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இக்கண்காட்சியை பார்த்து ரசிக்க தினசரி பல ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இந்த நிலையில் நாட்டுப்புற கலைஞர்களான செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர் புகைப்பட கண்காட்சியை நேற்று பார்வையிட்டனர். அதனை தொடர்ந்து அவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது “கோவை வ.உ.சி பூங்காவில் முதல்வரின் 50 ஆண்டுகால புகைப்பட கண்காட்சியை பார்த்தோம்.

முதல்வரின் உழைப்பு, அவர் கடந்துவந்த பாதை அனைத்தும் பார்க்கையில் வியக்காமல் இருக்க முடியாது. முதலமைச்சரின் பணி மேலும் சிறக்க நாங்கள் வாழ்த்துகிறோம். மேலும் முதல்வர் நீண்டநாள் ஆரோக்கியமுடன் இருக்க கடவுளை வேண்டுகிறோம். பெரு நகரங்களில் இதுபோன்ற புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது போன்று கிராம பகுதிகளிலும் இவ்வாறு நடத்தப்பட வேண்டும்” என செந்தில்-ராஜலட்சுமி தெரிவித்தனர்.