
மதுரை மாவட்டத்தில் உள்ள கண்ணூரில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். பூச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வள்ளி. ராஜாவுக்கும், வள்ளிக்கும் இருவருக்கும் தனித்தனியாக திருமணமும், குடும்பமும் இருந்த நிலையில், இருவரின் நட்பு கள்ளக்காதலாக மாறியதாம். பின்னர் அவர்கள் செக்கானூரணி பகுதியில் வீடு எடுத்து கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தனர்.
வள்ளி, கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்தபோது, தன்னுடன் பணியாற்றிய செல்வம் என்பவருடன் நெருங்கிய பழக்கம் கொண்டார். ராஜா இல்லாத நேரம் வள்ளி செல்வத்துடன் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். இதனால், ராஜாவும், செல்வமும் இடையே மோதல் ஏற்படக்கூடிய சூழல் உருவாகியது.
கடந்த அக்டோபர் 4ஆம் தேதி, ராஜா வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, செல்வம் சடலமாக கிடந்தார். இது குறித்து உடனடியாக காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வள்ளி, அவரது தோழி வளர்மதி, மற்றும் செல்வம் மது குடித்துள்ளனர். அப்போது செல்வம் தன்னுடன் வந்து விடு என வள்ளியை அழைத்த போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறியது.
செல்வம், வள்ளியை கன்னத்தில் அடித்ததால், வள்ளி ஆத்திரமடைந்து, வளர்மதி உதவியுடன் செல்வத்தை கயிற்றால் கழுத்து நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. இதற்கு பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.இருவரையும் போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.