
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க கூடாது என்று அந்நிறுவனத்தின் சிஇஓ வசம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இதனை விமர்சித்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார். பின்னர் பாஜக தலைவர் ஜே பி நட்டா அறிவுரைத்தலையின்படி அதை நீக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிக அளவில் உற்பத்தியில் ஈடுபட வேண்டாம் என்று அந்நிறுவனத்தின் சிஇஓ இடம், டிரம்ப் கூறியது தொடர்பாக நான் பதிவு செய்த பதிவை நீக்க வேண்டும் என்று தேசிய தலைவர் நட்டா என்னை தொடர்பு கொண்டார்.
அந்த பதிவு என்னுடைய தனிப்பட்ட கருத்துதான். அதனை தான் இன்ஸ்டாவிலிருந்து நீக்கிவிட்டேன் என்று எக்ஸ் பதிவில் கூறியுள்ளார். அதில் அவர், இதற்கு என்ன காரணமாக இருக்க முடியும். அவர் அமெரிக்க அதிபர், ஆனால் உலக அளவில் அதிக விரும்பப்படும் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். இரண்டாவது முறையாக டிரம்ப் அதிபர் ஆகியுள்ளார்.
ஆனால் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைத்துள்ளார். ஆல்பா மேல் -லாக இருக்கலாம். ஆனால் பிரதமர் மோடி ஆல்பா மேல்- களின் தந்தை. இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அதில் தெரிவித்திருந்தார். அதனை நான் தற்போது நீக்கி உள்ளேன் என்று தெரிவித்தார்.