
செங்கல்பட்டு ஒரகடம் சாலை சந்திப்பு அருகே சிறுவனான ஆலன்(15) மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளார். மோட்டார் சைக்கிள் பின்னால் ஆலனின் அம்மா ஜெயஸ்ரீ(32) அமர்ந்திருந்தார். இருவரும் மின்சார கட்டணத்தை செலுத்தி விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆலனும் அவரது தாய் ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களும் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாய் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.