
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிவுடன் தென்னாப்பிரிக்கா அணி மோதியது. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. அதாவது 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வென்று வரலாற்றுப் படைத்துள்ளது. இந்த வெற்றிக்கு காரணம் கேப்டன் டெம்பா பவுமா. இவர் யார் என்பதை குறித்து தற்போது பார்க்கலாம். கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின் போது ‘Black Lives Matter’ விவகாரம் உலகம் முழுவதும் பற்றிய எரிந்தது.
அதன் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்கள் போட்டி தொடங்கும் முன் மண்டியிட்டு வீரர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அதன்படி தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கமும் தனது அணிக்கு இதை கட்டாயமாக்கியது. அப்போதைய கேப்டனாக இருந்தவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியிட மறுத்தார். இதைத்தொடர்ந்து அவர் கேப்டன் பதவியில் இருந்தும் விலகினார். அப்போது தான் பவுமா கேப்டன் ஆக பதவியேற்றார். இந்த சர்ச்சையை மிகவும் நிதானமாக அனுகிய அவர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இதில் பவுமானின் தலைமை பெரிதும் பாராட்டப்பட்டது. அடுத்த நாள் அவருக்கு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து அவர் முழு நேர கேப்டனாக செயல்பட்டு வருகிறார். தென் ஆப்பிரிக்கா அணியில் பூவக்குடி கருப்பினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் கருப்பினத்தைச் சேர்ந்தவர் கேப்டன் ஆக வேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டது. அதற்காகவும் தன்னுடைய உயரம் காரணமாகவும், நிறம் இன உடலமைப்பால் தொடர்ந்து ட்ரோல் செய்யப்பட்டவர் தான் பவுமா. இது எல்லாம் உடை தெரிந்து விட்டு இன்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.