நான் மிருகமாய் மாறினால், அயோத்தி ஆகிய படங்களில் டைரக்டர் சசிகுமார் நடித்து வந்தார். இதனிடையே நேரமில்லாத காரணத்தால் படம் இயக்குவதை அவர் தவிர்த்து வந்தார். இந்நிலையில் 13 வருடங்களுக்கு பிறகு மீண்டுமாக சசிகுமார் படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் இமைக்கா நொடிகள் படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமான அனுராக் காஷ்யப் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. இப்போது இந்த படத்தின் முதற்கட்ட தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. வருகிற ஜூன் மாதத்தில் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.