வயது வந்தோருக்கான திரைப்படங்களுக்கு மட்டும் யெஸ்மா சீரிஸ் எனப்படும் மலையாளத்தில் ஓடிடி தளம் ஒன்றுள்ளது. இதை ஆர்யானந்தா கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தயாரித்து, அதில் நான்சி, செல் இரண்டு வெப் சீரிஸ்கள் முதலில் பார்வையாளர்களுக்காக  வெளியிடப்பட்டது. மேலும் இந்த ஓடிடி தளத்தின் மாதச் சந்தா ரூ.111 எனவும் இந்த 2 சீரிஸ்களையும் லட்சுமி தீப்தா இயக்கியுள்ளார். அந்தரங்க படுக்கையறை காட்சிகள் அதிகம் கொண்ட நான்ஸி, ஸெலின்றெ டியூசன் கிளாஸ், பால் பாயாசம் போன்ற 18+ வெப் சீரிஸ்களை மலையாளத்தில் இயக்கியுள்ளார்.

மலையாள சினிமா இயக்குநரான இவர் இந்த படங்களில் நடிக்க வைப்பதற்காக சாதாரண சீரியல் என அனைவரையும் ஏமாற்றி நடிக்க வைத்ததாகவும், ஆனால் படம் வெளியான பின்பு தான்  அடல்ட் சீரிஸ் என்பது தெரியவந்தது என்று கூறியுள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே ஒரு பெண்ணை கட்டாயபடுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாகவும்,  மேலும் வேண்டாம் என கூறியும் அந்த பெண் நடித்த அந்தரங்க காட்சிகளை எல்லாம் வெளியிட்டதாகவும் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். இதனையடுத்து வெங்கனூரை சேர்ந்த 26 வயது வாலிபர் ஒருவரை படத்தில் நடிக்க வைப்பதாக கூறி, ஆபாச சீரியலில் கட்டாயபடுத்தி நடிக்க வைத்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்  டைரக்டரை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். இந்நிலையில் அன்றைய தினமே அவருக்கு நிபந்தனைகளின் கீழ் ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் 6 வாரங்களுக்கு ஒவ்வொரு புதன் மற்றும் வியாழன் கிழமை தோறும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.