
எல்.ஐ.சி என்பது ஒரு ஆயுள் காப்பீடு நிறுவனமாகும். இந்த நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை கவருவதற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்போது எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் வெறும் ரூ 100 மூலம் SBI தொடங்கலாம் என்று அறிவித்துள்ளது.
இத்தகைய திட்டம் மூலம் முதலீட்டார்களின் பணத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது எனவும், இந்த மியூச்சுவல் ஃபண்ட் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர SBI வரம்பை ரூ 200 ஆகவும், கால ஆண்டுகளுக்கான குறைந்தபட்ச வரம்பு ரூ 1000 ஆகவும் கொண்டுள்ளது.
இவை அனைத்தும் நடைமுறைக்கு வந்து விட்டது என்று எல்.ஐ.சி நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தகைய SBI மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் குறைவான ஊதியம் பெறுபவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என அனைவரும் முதலீடு செய்யலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.