
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு நாடு முழுவதும் கடும் கடனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று முதல் முறையாக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில் பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களின் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர் கூறியதாவது, மக்கள் நம்முடன் இருக்கும் வரை பயங்கரவாதம் முடிவுக்கு வரும். மக்களின் கோபத்தை கருத்தில் கொண்டு சரியான நடவடிக்கைகளை எடுத்தால், இது அதன் முடிவுக்கு ஆரம்பம். மக்களை அன்னியப்படுத்தும் எந்த முடிவையும் நாம் எடுக்கக் கூடாது. துப்பாக்கியால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியாது.
ஆனால் மக்கள் நம்முடன் இருந்தால் கட்டுப்படுத்த முடியும் அந்த நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஜம்மு காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மசூதியில் தொழுகைக்கு முன் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த மாற்றத்தை வலுப்படுத்த முயற்சிக்கிறோம் என்று கூறினார்.