IPL கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி 5வது வெற்றியை தனதாக்கி “பிளே-ஆப்” சுற்று வாய்ப்பில் நீடித்துள்ளது. முதலாவதாக விளையாடிய பஞ்சாப் அணி ஷிகர் தவானின் (57 ரன்கள்) அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து குவித்தது.

இதையடுத்து விளையாடிய கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன் தேவையாக இருந்தபோது ரிங்கு சிங் (21 ரன்கள், 10 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) பவுண்டரி விளாசி அணி வெற்றி இலக்கை எட்ட வைத்து முற்றுப்புள்ளி வைத்தார். கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டரான ஆந்த்ரே ரஸ்செல் (42 ரன்கள், 23 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியானது குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்கவில்லை. பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் கொல்கத்தா அணியினுடைய கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக ipl நிர்வாகம் விதித்து உள்ளது.