
உலகக்கோப்பை 2023-ல் ஒருமுறை கூட தோல்வியை சந்திக்காத இந்திய அணி தனது இறுதிப் போட்டியில் வெற்றியை பதிவு செய்வதற்காக போராடி வருகிறது. முதலில் களத்தில் இறங்கிய கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் நிதானமாகவும், அதே சமயம் அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்து வந்தனர். இந்நிலையில்,
சுவாரசியமாக நடைபெற்று வரும் உலக கோப்பை இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு முதல் விக்கெட்டாக கில் அவுட் ஆகி செல்ல, அடுத்தபடியாக அனைவரும் எதிர்பார்த்த விராட் கோலி தற்போது hukum பாடல் ஒலிக்கப்பட மைதானத்தில் களமிறங்கினார். முதல் விக்கெட்டை இழந்து துவண்டு போயிருந்த ரசிகர்களை குஷி படுத்தும் வகையில், அடுத்தடுத்து தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை அடித்து ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்துள்ளார்.