
ஜீதமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி தொடரில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நக்ஷத்திரா. இந்த சீரியல் வாயிலாக பிரபலமான நக்ஷத்திரா பின், எந்த தொடரிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். கூடிய விரைவில் இவர் புது சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
நக்ஷத்திரா கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக விஸ்வநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ரசிகர்களுக்கு நக்ஷத்திரா குட் நியூஸ் கூறி உள்ளார். அதாவது, நக்ஷத்திரா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் புகைப்படத்தை பதிவுசெய்து தெரிவித்துள்ளார்.
View this post on Instagram