தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சிம்ரன், முதலில் நடிகர் விஜய் படத்தின் மூலம் அறிமுகமான இவர். திருமணத்திற்கு பிறகு தான் நடிப்பதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு தற்போது அவர் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான குட் பேட் அட்லி என்ற திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மேலும் கடைசியாக சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த டூரிஸ்ட் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சிம்ரன் சந்திரமுகி படத்தில் முதலில் தேர்வானது நான் தான் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, சந்திரமுகி படத்தில் ஜோதிகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நான் தான். ஆனால் என் குடும்பத்திற்காக அப்போது அந்தப் படத்தை நிராகரித்து விட்டேன். இதனால் ரஜினி சார் உடன் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன். அதன் பிறகு பேட்ட திரைப்படத்தின் மூலம் அந்த வாய்ப்பு நிறைவேறியது என்று தெரிவித்துள்ளார்.