தமிழகம் முழுவதும் நேற்று 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியானது. பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெயிலானதால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்று 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் ரயில் முன்பு பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடலூரில் உள்ள சிதம்பரம் ரயில் ரயில் நிலையத்தில் ரயில் முன்பு பாய்ந்து மாணவர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த மாணவர் தற்கொலை கடிதமும் எழுதியுள்ளார்.