தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்றத்தில் இருந்து பல்வேறு விதமான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் சென்னையில் உள்ள அண்ணா சாலையில் இருந்து அண்ணா சதுக்கம் வரை அமைதி பேரணியை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த பேரணி அண்ணா நினைவிடத்தில் முடிவடையும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் பேரினியர் அண்ணாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்த இருக்கிறார்.