
கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் 17 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். அந்த சிறுவன் குடும்பத்தில் ஏழ்மை சூழ்நிலை காரணமாக வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். அந்த சமயத்தில் சின்ன முட்டம் பகுதியில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்வதால் அந்த சிறுவன் துறைமுகத்திற்கு வேலை தேடி சென்றான்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சார்லி செல்வ கார்த்தி (27) என்பவர் சிறுவனை பார்த்ததும் அருகில் சென்று விசாரித்தார். அப்போது அந்த சிறுவன் கூறியதை கேட்டதும் அவனிடம் கண்டிப்பாக வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அவனிடமிருந்த மொபைல் போனை வாங்கியுள்ளார்.
அதன் பின் அந்த வாலிபர் மொபைல் போனுடன் காணாமல் போனதால் பதட்டமடைந்த சிறுவன் உடனடியாக கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் செல்வ கார்த்தியை தேடி வந்தனர்.
அப்போது இரணியலில் நின்று கொண்டிருந்த சார்லி செல்வ கார்த்தியை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்த நிலையில் கைது செய்தனர். மேலும் சிறுவனை ஏமாற்றி மொபைல் போனை பறித்து சென்ற அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.