டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் வியூக நிபுணர் மற்றும் ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசி அவர் கூறியதாவது, சமூகம் பற்றி சிறந்த முறையில் புரிந்து கொள்ள தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அல்லது ஆய்வு ஆகியவற்றை மேற்கொள்வதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதனை வரவேற்கிறோம்.

ஆனால் பீகாரில் நாம் காண்பது போல, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மட்டும் நிலைமையை முன்னேற்றாது. இதன் முடிவுகளைக் கொண்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும். அப்படி செய்யும் போது மட்டுமே மாற்றம் ஏற்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் நீண்ட நாட்களாக கூறி வந்தது.

அதன் தலைவர்கள் அடிக்கடி பேசும்போது இதனை வலியுறுத்தியுள்ளனர். இந்த முடிவுக்கு ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் மற்றும் பீகார் முன்னாள் முதல் மந்திரியான தேஜஸ்வி யாதவ் புகழாரம் தெரிவித்துள்ளார். இது எங்களுடைய 30 ஆண்டுகால வேண்டுகோள் என குறிப்பிட்ட அவர் அரசியல் வளர்ச்சி மட்டுமன்றி அனைத்து பொது உடமை வாதிகளுக்கும் கிடைத்த வெற்றி இது என்று அவர் தெரிவித்துள்ளார்.