
EV வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு இனிய அரசு மானியம் வழங்க அவசியம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த BNEF மாநாட்டில் பேசிய அவர், தொடக்கத்தில் EV வாகனங்களை தயாரிப்பதற்கான செலவு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது அதன் தேவை அதிகரித்துள்ளதால், உற்பத்தி செலவுகள் கணிசமான அளவு குறைந்துள்ளது.
இதன் காரணமாக செயல் திட்டம் தேவையற்றதாக மாறி உள்ளது என கூறினார். லித்தியம் அயன் பேட்டரியின் விலை தொடர்ந்து குறையும் போது, மின்சார வாகனங்களின் விளையும் குறையும். இன்னும் 2 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களும், மின்சார வாகனங்களும் ஒரே விலையில் இருக்கும் என்றார். தற்போது மின்சார வாகனங்களுக்கு 5% GST விதிக்கப்படுகிறது என்று கூறினார்.