
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
मौत का चुम्मा!!#अमरोहा के एक गांव में सांप निकला. गांव के जितेंद्र जीतू ने सांप को पकड़ा और गले में डाल लिया
गले में सांप डालकर जीतू ने गांव में “डेयरिंग शो” किया. इस दौरान वह सांप से अपनी जीभ “टच” करवाता रहा
अचानक सांप ने काट लिया. हड़कंप मच गया और जीतू जी तत्काल अस्पताल… pic.twitter.com/x5k5jLLFip
— Narendra Pratap (@hindipatrakar) June 14, 2025
அதாவது உத்திர பிரதேஷ் மாநிலம் அம்ரோஹாவில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர ஜீது என்பவர் அந்தப் பாம்பை பிடித்து தனது கழுத்தில் அணிவித்து கொண்டார். அதன் பிறகு அந்தப் பாம்பின் வாயை தனது நாக்கின் அருகே வைத்துக்கொண்டு வித்தை காட்டினார்.
அப்போது திடீரென அந்த பாம்பு அவரை கடித்து விட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் ஜீதுவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.