ரயில் பயணத்தின் போது பயணி ஒருவர் வியாபாரிகளிடமிருந்து தின்பண்டங்களை திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில், அந்த நபர் வியாபாரிகளின் கவனத்தை திசைதிருப்பி, உணவுப் பொட்டலங்களை திருடுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்தச் செயல் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பயணிகளின் பொறுப்பற்ற தன்மை மற்றும் சமூக ஒழுக்கம் (Civic sense) குறித்து பலரும் கடுமையான கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
The civic sense of Indians is beyond repair, it cannot be improved at any cost.
A man was selling egg biryani in the train.
Then a person sitting above stole a box of egg biryani.
Later he ate the stolen biryani with great relish. pic.twitter.com/VHDfSABCdk
— Oppressor (@TyrantOppressor) February 22, 2026
வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக ரயில்களில் பொருட்களை விற்கும்போது, இதுபோன்ற திருட்டுச் செயல்களில் ஈடுபடுவது அவர்களின் உழைப்பை சுரண்டுவதற்கு சமம் என்று நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதுடன், தேவையற்ற குழப்பங்களையும் விளைவிக்கும் என்பதால், இத்தகைய நபர்கள் மீது ரயில்வே காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
