ரோமில் இருந்து ஜெர்மனிக்கு ரியானெர் போயிங் 737 விமானம் புறப்பட்டது. அப்போது விமானத்தில் பூனை சத்தம் கேட்டதால் மீண்டும் தரையிறங்கப்பட்டது. அதன் பின் விமானத்தில் உள்ள பூனையை பணியாளர்கள் தேடினர். ஆனால் அவர்களால் பூனையை பிடிக்க முடியவில்லை. அந்த பூனை மின்சார வயரிங் பகுதியில் புகுந்தது.

இதனால் பாதுகாப்புக் கருதி விமானம் ரத்து செய்யப்பட்டது. பூனை அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருந்ததால், பூனையை பிடிக்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. இறுதியில் 2 நாட்களுக்குப் பின்பு, பூனை தானாகவே விமானத்தில் இருந்து வெளியேறியது. இதன் காரணமாக தொடர்ந்து 2 நாட்களாக அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது.