மக்களின் வாழ்க்கையில் மிகவும் அத்தியாவசிய ஒன்றாக இருப்பது உணவு. எனவே வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு உதவும் வகையில் நியாய விலை கடைகள் மூலம் அத்தியாவசிய பொருளான அரிசி, பருப்பு, சக்கரை போன்ற பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு ரேஷன் கார்டு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கின்றது. தற்போது நியாயவிலை கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

TNPDS  பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்கள் தேவை இல்லை என்றால் தங்களுடைய அட்டையை பொருட்கள் இல்லாத அட்டையாக மாற்றிக் கொள்ள முடியும். மேலும் தங்களது அட்டை வகையை மாற்ற இங்கே கிளிக் செய்யுங்கள் என்று இருக்கும், அதனை கிளிக் செய்தால் அடுத்த பக்கத்திற்கு செல்லும், அங்கு பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். அதன் பிறகு அதன் கீழ் உள்ள கேப்சாவை பதிவு செய்த வேண்டும். அதன் பின்பு உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும் அதை பூர்த்தி செய்தால் குடும்ப அட்டை மாற்றம் தொடர்பான பக்கத்திற்கு நீங்கள் செல்லலாம்.

இதில் குடும்ப அட்டை எண், நியாய விலை கடை குறிப்பிடு போன்றவற்றை இருக்கும். அதில் அட்டை வகை மாற்றம் என்ற காலத்தை மட்டும் கிளிக் செய்ய வேண்டும். அட்டை வகை சக்கரை அட்டையாக இருந்தால் சக்கரை அட்டை என பதிவு செய்யப்பட்டிருக்கும், பண்டகமில்லா அட்டை என்றால் பண்டகமல்ல அட்டை என்று பதிவு செய்யப்பட்டு இருக்கும். நமக்கு தேவையானதை நிரப்பிவிட்டு, அதற்கு கீழே இருக்கும் ஓகே பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதையடுத்து இந்த தகவல்களை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டதும் ரேஷன் கார்டு வழங்கப்படும்.