இந்தியாவில் நடக்கும் உள்ளூர் டி20 தொடர் ஐபிஎல் இன் பதினெட்டாவது சீசன் ஆனது இந்த வருடம் நடைபெறுகிறது.. 10 அணிகள் இந்த சீசனில் கலந்து கொள்கிறது. இந்த தொடருக்கான  வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 577 வீரர்கள் பங்கு பெற்றார்கள். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உட்பட 182 வீரர்கள் 639.15 கோடிக்கு ஏலத்தில் விற்கப்பட்டார்கள்.

இந்த தொடருகான அட்டவணை ஆனது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாவிட்டாலும் அடுத்த மாதம் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் அட்டவணை உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 18 வது சீசன் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற் பந்துவீச்சாளரான அல்லா கசன்பரை மும்பை இந்தியன்ஸ் அணியானது 4.8 கோடிக்கு வாங்கியது. இருப்பினும் காயம் காரணமாக அவர் இந்த வருட ஐபிஎல் சீசனிலிருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மானை மும்பை அணியில் சேர்த்து இருக்கிறது.