
டெல்லியில் பாரத் மண்டபத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் தொழில் வளர்ச்சி கவுன்சில்கள் இணைந்து நடத்தும் பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, பாரத் டெக்ஸ் உலகளாவிய ஒரு மெகா ஜவுளி ஆக வளர்ந்துள்ளது. உலகின் 6-வது பெரிய ஜவுளி ஏற்றுமதியாளராக நாம் இருக்கிறோம். தொழில்நுட்ப ஜவுளி துறையில் இந்தியா தனது திறமையை பயன்படுத்தி ஏராளமான வாய்ப்புகளை உருவாக்குகிறது.
கடின உழைப்பு மற்றும் நிலையான கொள்கை தான் இந்த வெற்றிக்கு காரணம். 2025 ஆம் ஆண்டில் பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பருத்தி உற்பத்தி திறன் இயக்கத்தை அரசு அறிவித்தது. கடந்த ஆண்டில் இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிகள் 7% வளர்ச்சி அடைந்துள்ளன. இந்தியாவில் தற்போது 3 லட்சம் கோடிகளாக இருக்கும் இந்த ஏற்றுமதியை வருகிற 2030 ஆம் ஆண்டில் 9 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.