
இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, மும்பையில் உள்ள லீட்சு மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 471 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 465 ரன்கள் எடுத்தது. 6 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 364 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக இருந்தது. கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.
இந்நிலையில் கடைசி நாளில் இங்கிலாந்து அணிக்கு ஜடேஜா தொல்லையாக இருப்பார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது இங்கிலாந்து அணி பாஸ்பால் அட்டாக்கிங்கில் ஒரு ஓவருக்கு 4 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.
கடைசி நாள் 90 ஓவர்கள் பேட்டிங் செய்தால் இங்கிலாந்து அணியால் வெற்றி பெற முடியும். அதற்கு காலையில் பும்ராவையும் மதியம் ஜடேஜாவையும் எதிர்த்து அவர்கள் நன்றாக விளையாட வேண்டும். சுழற் பந்துவீச்சாளரான ஜடேஜா நான்காவது இன்னிங்ஸில் இங்கிலாந்துக்கு பிரச்சினையாக இருப்பார் என்று வாகன் கூறினார்.