
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகின்ற நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் களம் இறங்கி உள்ளனர். இதில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கொலராடோ மாகாணம் அரோரா நகரில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதில் சட்ட விரோதமாக நுழைந்த சட்ட விரோதமாக நுழைந்த புலம் பெயர்ந்துள்ளவர்களால் அமெரிக்கா தற்போது உலகம் முழுவதும் ஆக்கிரமிக்கபட்டுள்ளது. அதோடு சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் எனவும், அமெரிக்காவில் அமெரிக்கர்கள் பாதுகாப்பு படையினர், போலீசாரை கொலை செய்யும் புலம் பெயர்ந்தோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என நிகழ்ச்சியில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.