
ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் சிந்தட ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். மத போதகராக இருக்கும் இவர் உயர் நீதிமன்றத்தில் பட்டியலின வன்கொடுமை தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது அப்பகுதியை சேர்ந்த அக்காலா இராமிரெட்டி என்பவர் தன்னை சாதி பெயர் கூறி திட்டியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த வழக்கில் கூறியிருந்தார்.
இதனை எதிர்த்து சிந்தட ஆனந்த் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் பல வருடங்களுக்கு முன்பாகவே அவர் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறிவிட்டார் என்றும் கடந்த 10 வருடங்களாக மத போதகராக இருக்கிறார் என்பதால் அவர் ராமிரெட்டி மீது பட்டியலின வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என இராமிரெட்டியின் வழக்கறிஞர் வாதாடினார். இதற்கு சிந்தட ஆனந்தின் வழக்கறிஞர் “உரிய சாதி சான்றிதழை அவர் பெற்றுள்ளார் ”என்று கூறினார்.
இதனை கேட்ட நீதிபதி இருதரப்பு வாதங்களையும் வைத்து சிந்தட ஆனந்தின் மனுவை தள்ளுபடி செய்தார். அதோடு மதம் மாறினால் பட்டியலின அந்தஸ்தை இழந்து விடுவார்கள் என்பதால் நீங்கள் சாதி பெயரை கூறி திட்டியவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்று தீர்ப்பு வழங்கினார். மேலும் சிந்தடானந்தின் சாதி சான்றிதழை ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளிடம் நீதிபதி கூறினார்.