
சமீபத்தில் “பியாண்ட் 23 கிரிக்கெட்” உரையாடல் நிகழ்வில் இந்திய கிரிக்கெட் வீரர் பும்ரா கலந்து கொண்டார். அதனை ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தொகுத்து வழங்கினார்.
அந்த உரையாடல் நிகழ்ச்சியில் பும்ரா தனது கிரிக்கெட் பயண வாழ்க்கை தொடர்பான விஷயங்கள் பலவற்றை பகிர்ந்து கொண்டார். அதில் முக்கியமாக “நீங்க ஏன் விக்கெட் விழ்த்திய பிறகு ஆக்ரோஷமா கொண்டாடுவதில்லை?” என மைக்கேல் கேட்ட கேள்விக்கு பும்ரா பதில் அளித்தார்.
அதற்கு அவர் கூறியதாவது, “நான் பார்த்த வரையில் அனைத்து பந்துவீச்சாளர்களும் பேட்ஸ்மேன்களை மிரட்டுவதை கவனித்திருக்கிறேன். அதனை நானும் பின்பற்ற முயற்சி செய்தேன். ஆனால் அது எனக்கு சரியாக வரவில்லை.
எனக்கும் ஆக்ரோஷமான குணம் உள்ளது. ஆனால் அதை செய்ய முயற்சித்த போது என்னால் பந்துவீச்சில் கவனம் செலுத்த முடியவில்லை. அப்போதுதான் இது சரியான வழி அல்ல என்பதை உணர்ந்தேன்.
அதன் பின் எனது ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த முயற்சித்தேன். எனக்கு உதவும் வகையில் அதனை மாற்ற முயற்சித்தேன். அதன் பின் எனக்கு சாதகமான வழியை கண்டுபிடித்தேன். நான் வெற்றி பெற விளையாடுகிறேன்.
ஆக்ரோஷமாக கொண்டாடுவதற்கு அல்ல அதே சமயம் எதிரில் விளையாடும் வீரர்களையும் நாம் மதிக்க வேண்டும். எனவே நான் எல்லையை கடக்கவோ அல்லது கோமாளி போல நடந்து கொள்ளவோ விரும்பவில்லை என பதிலளித்தார்.