
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தன்னை அரசு அதிகாரி என்று கூறிக்கொண்டு மனு என்ற நபர் ஃபர்னிச்சர் மற்றும் போன் கடைகளில் போலி காசோலைகளை கொடுத்து இலட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
கிராம பஞ்சாயத்து அதிகாரி என குறிப்பிடப்பட்ட வண்டியில் வந்த இவர் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருள்களை வாங்கிவிட்டு போலியான காசோலையை கொடுத்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. கடைக்காரர்களின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான மனுவை தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் போன் கடைக்கு வந்து சென்ற சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.